அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தல்
அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை-திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிக்க- செங்கல்பட்டில் ரௌடிகள் என்கவுண்டர் ஏன்? ஐ.ஜி. விளக்கம்
Advertisement
இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 3 வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.