முகப்பு
தமிழ்நாடு

முழு ஊரடங்கின் போது திருமணம்:100 பேருக்கு மட்டுமே அனுமதி -தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருமணங்களில் 100 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருமணங்களில் 100 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தினத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி உண்டு.

நிகழ்ச்சிக்கு செல்பவா்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண மண்டபத்தில் 100 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். முழு ஊரடங்கு நாள்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவா்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பா்.

முழு கட்டுரையைப் படிக்க →