சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 35,833 ஆனது
சென்னையில் ஜனவரி 12ஆம் தேதி காலை நிலவரப்படி 35,833 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் ஜனவரி 12ஆம் தேதி காலை நிலவரப்படி 35,833 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6.01 லட்சமாக உள்ளது. 5.56 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 8,689 பேர் பலியாகிவிட்டனர். கரோனா பாதித்து 35,833 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 6 சதவீதமாகும்.
இதையும் படிக்க.. பூஸ்டர் தடுப்பூசி பெயரில் புதிய மோசடி: மக்களே எச்சரிக்கை
சென்னையில் நாள்தோறும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று அதிகபட்சமாக 35 ஆயிரம் கரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக, அண்ணாநகரில் 1007 பேரும், தேனாம்பேட்டையில் 992 பேரும், கோடம்டபாக்கத்தில் 979 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.