புதுவை தலைமைச் செயலருக்கு கரோனா
புதுவை தலைமைச் செயலராக இருப்பவர் அஸ்வினி குமார். இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை.
புதுச்சேரி : புதுவை தலைமைச் செயலராக இருப்பவர் அஸ்வினி குமார். இவருக்கு சில நாள்களாக உடல்நிலை சரியில்லை.
இந்நிலையில் புதன்கிழமை இவர் பரிசோதனை செய்ததில், வியாழக்கிழமை காலை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
தலைமைச் செயலர் புதன்கிழமை நடந்த இளைஞர் தின விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, அமைச்சர்களுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.