தமிழ்நாடு

தை பொங்கல் திருநாள்: மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர்

DIN

வெள்ளக்கோவில்: தை பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் வி.பி.எம்.எஸ் நகரில் மாப்பிள்ளை அலங்காரத்தில் வெற்றி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வி.பி.எம்.எஸ் நகரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்படுகின்றன. 

வி.பி.எம்.எஸ் நகர் விநாயகர் கோயிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோயில் நிர்வாகத்தினர், குறைந்த எண்ணிக்கையிலான உள்ளூர் பக்தர்கள் பங்கேற்பில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. 

இதில் மாப்பிள்ளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். 
வெள்ளக்கோவில் நகரில் ஆங்காங்கே மக்கள் தத்தமது வீடுகளில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் கொத்துகள் கட்டி, விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT