கோவை பி.கே புதூரில் சிறுத்தை நடமாட்டம்: விரைந்தது வனத்துறை
கோவை பி.கே. புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று காலையில் தென்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத்துறை விரைந்து.
கோவை: கோவை பி.கே. புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று காலையில் தென்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத்துறை விரைந்து.
கோவை பி.கே புதூர் பகுதியில் ஒரு தனியார் குடோன் பகுதியில் சிறுத்தை ஒன்று காலையில் தென்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு மற்றும் வலையை வைத்துப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர், காவல்துறையின் உதவியோடு செய்து வந்துள்ளனர்.