முகப்பு
தமிழ்நாடு

ஜனவரி-மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம்: தமிழக அரசு

ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதம் வரையே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என தமிழக அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மே மாதம் வரையே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று மதுரை பள்ளப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.