தமிழ்நாடு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி? அமைச்சர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

கனியாமூரில் கலவரம் நடைபெற்ற பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மாணவியின் உடலும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

மேலும், சேலம் டிஐஜி பிரவீன்குமார்அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்துகொண்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT