முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர் உரிமையைக் காக்க கச்சத் தீவு மீட்கப்படுமா? வைகோ கேள்விக்கு வெளியுறவுத்துறை பதில்

தமிழக மீனவர் உரிமையைக் காக்க கச்சத் தீவு மீட்கப்படுமா? என்கிற வைகோவின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

Updated On : 25 ஜூலை, 2022 at 12:46 PM
பகிர்:

தமிழக மீனவர் உரிமையைக் காக்க கச்சத் தீவு மீட்கப்படுமா? என்கிற வைகோவின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விகள், 
(அ) பாக் ஜலசந்தியில் உள்ள கச்சத் தீவில் உரிமை மற்றும் மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தது உட்பட, பல சந்தர்ப்பங்களில் தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதற்கான பதில்;

Advertisement

(இ) இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்துமா?

(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

வைகோவின் இந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதிலில்,

(அ) முதல் (ஈ) வரை உள்ள கேள்விகளுக்கான பதில்: இந்திய அரசாங்கம் 1974 மற்றும் 1976 இல் இலங்கையுடன் கடல் எல்லை ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ஒப்பந்தங்களின் கீழ், கச்சத்தீவு தீவு, இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோடு இலங்கைப் பக்கத்தில் உள்ளது.

தற்போது, கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் இராஜதந்திர வழிகளில் நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.