தமிழ்நாடு

‘இபிஎஸ் பொதுச்செயலாளராவார்’: கே.பி.முனுசாமி உறுதி

நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

DIN

நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் மேடையிலிருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்ஸின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். அடுத்து நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இது தீர்மானமாக முன்வைக்கப்படும். நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி கே.பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT