பொது ஏலம் விடப்படும் காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள்
காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள், மார்ச் 26ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
தமிழ்நாடுபொது ஏலம் விடப்படும் காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள்
காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள், மார்ச் 26ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
சென்னை: காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள், மார்ச் 26ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
சென்னை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், தொழில்நுட்பபிரிவு மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 43 வாகனங்கள் (3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 40 இரண்டு சக்கர வாகனங்கள்) மார்ச் 26ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
இதையும் படிக்க.. காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..
ஏலம் எடுக்க விரும்புவோர் 25.03.2022 மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 26.03.2022 அன்று காலை 10.00 மணி முதல் 11.15 மணிக்கு முன் பணமாக ரூபாய். 1000/- செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும். முன்பணத் தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலயதுக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.