137 நாள்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
தமிழ்நாட்டில் 137 நாள்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 137 நாள்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 77 காசுகள் உயர்ந்து ரூ.92.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து வீட்டு உபயோகத்திற்க்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையில் மற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது