முகப்பு
சென்னையில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி.
தமிழ்நாடு

இரவில் சைக்கிளில் ரோந்துப் பணி: சென்னை காவல் இணை ஆணையருக்கு முதல்வர் பாராட்டு

சென்னையில் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல் இணை ஆணையர் ரம்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு

இரவில் சைக்கிளில் ரோந்துப் பணி: சென்னை காவல் இணை ஆணையருக்கு முதல்வர் பாராட்டு

சென்னையில் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல் இணை ஆணையர் ரம்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
சென்னையில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி.
பகிர்:

சென்னையில் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல் இணை ஆணையர் ரம்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக ரம்யா பாரதி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அப்பகுதியில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார். 

அவர் இரவு நேரங்களில் சைக்கிளில் சென்று ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு சென்னை பூக்கடை முதல் வண்ணாரப்பேட்டை பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த காவலர்களின் பணி குறித்தும் ஆய்வு செய்தார். 

அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

'ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →