முகப்பு
தமிழ்நாடு

நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

நாளை 1 லட்சம் இடங்களில்  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 மே, 2022 at 3:38 PM
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
பகிர்:

சென்னை: நாளை 1 லட்சம் இடங்களில்  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த முகாம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை என தெரிவித்தார்.

Advertisement

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில்  மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.


அடுத்த மாதம் 4-வது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.