தமிழ்நாடு

சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

DIN


சிதம்பரத்தில் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயதப்படை காவலர் பெரியசாமி(26), துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் புதன்கிழமை அதிகாலை தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர், கடந்த மே 6-ஆம் தேதி முதல் இப்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது தந்தை பெயர் முனுசாமி. சொந்த ஊர் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளையில்  உள்ள  மணிகொல்லை தெருவைச் சேர்ந்தவர்.

சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். ரமேஷ்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT