சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தட்டச்சு தேர்வு வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு