முகப்பு
தமிழ்நாடு

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:28 AM
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
பகிர்:

ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக தனுஷ்கோடி விளங்கி வருகிறது. இன்று காலை முதல் தனுஷ்கோடி பகுதியில் கடல்சீற்றம் கடுமையாகக் காணப்படுகிறது.

பல அடி தூரத்துக்கு கடல் அலை எழும்பிவருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அரிச்சல்முனை பகுதிக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், வார இறுதி மற்றும் விஜயதசமி, சரஸ்வதி பூஜை விடுமுறை, காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →