வடகிழக்குப் பருவமழை: விடுமுறை மட்டுமல்ல பரிசுகளையும் பெற்றுத் தரும்
வடகிழக்குப் பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை: விடுமுறை மட்டுமல்ல பரிசுகளையும் பெற்றுத் தரும்
வடகிழக்குப் பருவமழை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பேர்டர் அபாயக் குறைப்பு முகமை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது, வடகிழக்குப் பருவமழை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியம் தீட்டுதல், கவிதை, மீம்ஸ், படம் வரைதல், ஸ்லோகன்ஸ் போன்றவற்றை உருவாக்கி அனுப்பலாம்.
இந்த போட்டியில் தமிழகத்தில் 5 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்றும், மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் tnstateeoc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.