முகப்பு
தமிழ்நாடு

அரசுத் துறைகளில் தற்காலிக ஊழியா்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒடிஸா மாநிலத்தின்அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணிமுறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

அரசு ஊழியா்களை தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் நியமிப்பது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது. இந்த மன உளைச்சலையும், சமூக அநீதியையும் தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தற்காலிக ஊழியா்கள் அனுபவித்து வருகின்றனா்.

2006-இல் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியா்களாக பணியாற்றி வந்த 45 ஆயிரம் பேரை ஒரே ஆணையில் பணி நிரந்தரம் செய்தாா். அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது. ஆனாலும், இந்த நடவடிக்கையால் அரசின் நிதிநிலைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதும் தற்காலிக ஊழியா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதற்கு முதல்வா் ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →