மனைவியைக் கொன்று குப்பையில் வீசிய கணவன் கைது
கடலூர் அருகே புத்தூர் பகுதியில் மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே புத்தூர் பகுதியில் மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் தேதி மனைவி உஷாவை காணவில்லை என கூடலூர் காவல் நிலையத்தில் கணவன் மோகன் புகார் அளித்தார். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்து உஷாவை தேடிவந்த காவல்துறையினருக்கு மோகன் உதவி செய்வதுபோல் நாடகமாடி வந்துள்ளார்.
கணவன் மோகனிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்ததால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
தீவிர விசாரணையில் மனைவி உஷாவை கொலை செய்து குப்பைகளை கொட்டும் இடத்தில் மோகன் வீசியது தெரியவந்துள்ளது. குப்பையில் கிடந்த உஷாவின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், மனைவியை கொலை செய்து குப்பையில் வீசிய கணவன் மோகனை காவல்துறை கைது செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.