எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காதபடி ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் வரும்: அமைச்சர் ரகுபதி
நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும். நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்.
Advertisement
Advertisement
அதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். விரைவில் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். நீட் தேர்வு குறித்த சட்ட மசோதாவிற்கு விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிக்க: கடையின் பூட்டை உடைத்து ஸ்வீட், காரம் களவாடிச் சென்றவர்கள்!
பல்கலைக்கழக துணை வேந்தர்களை யார் நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்ட முன்வடிவுகள் ஆளுநரின் பார்வையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.