சைலேந்திர பாபு (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது! சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

DIN


தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்களில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மாநில கமாண்டோ பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் என கூடுதலாக 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT