தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்

DIN

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.6.79 கோடி வரி மற்றும் ரூ.6.79 கோடி அபாரதம் செலுத்தக் கோரிய நோட்டீஸை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். காப்புரிமை முழுமையாக தயாரிப்பாளர்களுக்கு வழங்காததால் சேவை வரியை செலுத்த அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இசையின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT