சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.