முகப்பு
தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 8 பிப்ரவரி, 2022 at 11:03 AM
பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
பகிர்:

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.

இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, கடந்த முறை நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஆளுநர் தெரிவித்ததற்கு, பாஜக கடந்தமுறையும் ஆதரவிக்கவில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனின் பேசுகையில் குறிக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடந்த முறை வெளிநடப்பு செய்த நிலையில், பேரவையில் இருக்கும் உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, விவாதத்தில் பங்கேற்காமல் பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.