தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது.