நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? - அமைச்சர் எஸ். ரகுபதி
சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை கோரியவர்கள், இப்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்?
புதுக்கோட்டை: சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை கோரியவர்கள், இப்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையைக் கோரினார்கள். இப்போது, நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்?
தனக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே எம்.பி.க்கள் பாஸ் கொடுப்பார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடக பாஜக உறுப்பினர் எப்படி பாஸ் கொடுத்தார்? புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி உண்மையைச் சொல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஓடிடியில் கூச முனுசாமி வீரப்பன்!
திமுகவினர் எப்படி நாகரீகமாகப் பேச வேண்டும் என ஆளுநர் தமிழிசை எங்களுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் உதயநிதி துணிச்சலாகப் பேசிவருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு சொல்கிறார்கள்.
ஆளுநர் முறைப்படி அரசியல் பேசக் கூடாது. ஆனால் தமிழிசை தொடர்ந்து தன்னை பாஜக மாநிலத் தலைவராகத் தான் நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்.
புழல் சிறையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றையும் மீறி ஒருவர் தப்பியிருக்கிறார். பார்வையாளர் பகுதிக்கு வந்து தப்பிப்போனதாக சொல்கிறார்கள். நிச்சயம் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று ரகுபதி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.