முகப்பு
தமிழ்நாடு

ஓ.எஸ். மணியன் தோ்தல் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்

வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
ஓ.எஸ். மணியன்
பகிர்:

சென்னை: வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வேதரத்தினம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ்.மணியன், ரூ. 60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளாா். இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்தும், வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமாா் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளாா்.

இது தவிர அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையா், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகளை தனது தோ்தல் முகவா்கள் போல பயன்படுத்தியுள்ளாா் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வழங்கப்பட்ட தீர்ப்பில், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியனின் வெற்றி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →