அதிமுகவில் இணைந்தார் மதுரை சரவணன்!
பாஜகவில் இருந்து விலகிய டாக்டா் பா.சரவணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.பாஜகவில் இருந்து விலகிய டாக்டா் பா.சரவணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.
பாஜகவில் இருந்து விலகிய டாக்டா் பா.சரவணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை விமான நிலையத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே ஏற்பட்ட தகராறில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பாஜகவினா் காலணியை வீசினா். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, நிதி அமைச்சரை நள்ளிரவில் சந்தித்த சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து விடியோ வெளியிட்டுள்ள சரவணன், 2023 புத்தாண்டு தொடக்கத்தில் அதிமுகவில் என்னை இணைந்துக் கொண்டேன். வரக்கூடிய காலங்களில் கட்சி வலுப்பெற எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அதானி, அம்பானிகளால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி பேச்சு
முன்னதாக, திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக வகித்து வந்த நிலையில், கடந்த தேர்தலின்போது பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.