முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தேர்தல்: தலைவர்கள் சிலைகள் மறைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைவர்களின் சிலைகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைவர்களின் சிலைகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து தொகுதிக்கு நேற்று(புதன்கிழமை) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாக நேற்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர், முன்னாள் முதல்வர்களின் படங்கள் மற்றும் எழுத்துகளை மறைத்தனர்.

தொடர்ந்து இன்று பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழுவுருவச் சிலைகளை மாநகராட்சி ஊழியர்கள் துணிகளைக் கொண்டு சுற்றி மறைத்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →