முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்:  தினேஷ் குண்டுராவ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:46 PM
கோப்புப்படம்
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், இளைய மகன் போட்டியிட வாய்ப்பு தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினாா்.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்ததாவது:

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாள்களில் தேர்வு செய்யப்பட்டு விடுவார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →