ஈரோடு கிழக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்: தினேஷ் குண்டுராவ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், இளைய மகன் போட்டியிட வாய்ப்பு தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினாா்.
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்ததாவது:
இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு: பாஜக 2 நாள்களில் முடிவு!
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாள்களில் தேர்வு செய்யப்பட்டு விடுவார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.