முகப்பு
தமிழ்நாடு

நெல்லை: குடிநீர் வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி நகரம் 23 வது வார்டில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி நகரம் 23 வது வார்டில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி நகரம் 23 வது வார்டுக்கு உட்பட்ட பகத்சிங் தெரு, ஜெயப்பிரகாஷ் தெரு மாதா பூங்கொடி தெரு, முஹமது அலி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →