திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள். 
தமிழ்நாடு

திருப்பூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: 

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளபடி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 ஐ உடனடியாக வழங்க வேண்டும். சமூக நலத்துறை அமைச்சர் உண்ணாவிரதக் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். சமூக நல இயக்குநர் அப்ரகாம் உத்தரவின்படி, ஓய்வுகாலப் பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சிவபாக்கியம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ், துணைத் தலைவர் ஜெயபால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT