முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆக.1-இல் போராட்டம்: ஓ.பி.எஸ்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆக.1-இல் போராட்டம் நடத்தப்படும்

Updated On : 12 ஜூலை 2023, 2:41 am IST
ஓபிஎஸ்
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆக.1-இல் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விரைந்து விசாரித்து உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வலியுறுத்தி அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆக. 1 ஆம் தேதிஆா்ப்பாட்டம் நடைபெறும்.

அதிமுக ஆட்சியில் ஏன் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறீா்கள். அப்போது, துணை முதல்வராகத்தான் நான் இருந்தேன். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்த மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மூத்த நிா்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments