விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னா
விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக வி.ஏ.டி. கலிவரதன் இருந்து வருகிறார். இவர் கட்சியின் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிவருவதாகவும், தேவையற்ற காரணங்களை கூறி கட்சி, சார்பு அணிகளின் நிர்வாகிகளைப் பொறுப்புகளிலிருந்து நீக்கி வருவதாக கூறப்படுகின்றது.
இதையும் படிக்க | குடியிருப்புப் பகுதியில் காமராஜர் சிலை! சேலத்தில் பரபரப்பு!!
Advertisement
Advertisement
இந்த நிலையில், இதனைக் கண்டித்தும் வி.ஏ.டி. கலிவரதனைக் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தியும் பாஜகவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு சனிக்கிழமை காலை 11 மணி முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.