தமிழ்நாடு

மதுரை - சென்னை: கூடுதலாக 140 சிறப்புப் பேருந்துகள்!

DIN


சென்னையிலிருந்து மதுரை சென்றவர்கள் திரும்புவதற்காக மதுரையிலிருந்து கூடுதலாக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் 15ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று திங்கள் கிழமை (நவ. 13) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (நவ. 14) வேலைநாள் என்பதால், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் மதுரையிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 15ஆம் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

SCROLL FOR NEXT