தமிழ்நாடு

வங்கக் கடலில் புயலுக்கான வாய்ப்பு அதிகரிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

DIN

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நாளைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் தமிழகம் முதல் ஒடிசா இடையே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT