அண்ணாமலை வருவதற்குள் தொடங்கிய பாஜக நிர்வாகிகள் கூட்டம்!
பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்குள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னை: பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்குள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடா்பாக பாஜக தேசியத் தலைமை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும், இரு கட்சிகளும் பெரிய அளவில் விமா்சனம் ஏதும் செய்யவில்லை.
இதற்கிடையே, பாஜக தேசியத் தலைமை அழைப்பின் பேரில், தில்லிக்கு அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சென்றாா். தில்லியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதனால், அண்ணாமலை தலைமையில் சென்னையில் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறவிருந்த அக்கட்சியின் மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகைதந்த நிலையில், அண்ணாமலை வருவதற்குள் கூட்டம் தொடங்கியுள்ளது.
மேலும், கூட்டத்துக்கு காலை 11.30 மணியளவில் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.