கோப்புப்படம் 
தமிழ்நாடு

உதயநிதியின் பேச்சைக் கண்டித்து செப். 11ல் தமிழக பாஜக போராட்டம்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்தும் மேடையில் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத அமைச்சர் சேகர் பாபுவைக் கண்டித்தும் இரு அமைச்சர்களும் பதவி விலகக் கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. 

வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT