தமிழ்நாடு

அவிநாசியில் வாலிபர் கழுத்தறுத்துக் கொலை

அவிநாசி அருகே ராயங்கோயில் பகுதியில் வாலிபர் வியாழக்கிழமை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

DIN

அவிநாசி: அவிநாசி அருகே ராயங்கோயில் பகுதியில் வாலிபர் வியாழக்கிழமை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராயங்கோயில் காலனி பகுதியில் வசித்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த லட்சுமணன்(35). இவரது மனைவி கங்கா. இவர்களது மகன் அருண்குமார் (16), மகள் ஜோதி.

திருச்சி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ்(32) மற்றும் லட்சுமணன் இருவரும் குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கொலை செய்யப்பட்ட யுவராஜ்

மேலும் லட்சுமணன் குடியிருக்கும் வீட்டிற்கும் அருகிலேயே, வள்ளியம்மாள் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் கடந்த சில நாள்களாக யுவராஜ் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்த யுவராஜ், வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் வீட்டின் உரிமையாளர் வள்ளியம்மாள் வந்து பார்த்தபோது, கத்தியால் கழுத்து அறுத்த நிலையில் யுவராஜ் உயிரிழந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் யுவராஜின் உடலை கைப்பற்றியதுடன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், கொலை செய்தவர்கள் யார், முன்விரோதமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT