முகப்பு
தமிழ்நாடு

தெலங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:23 AM
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
பகிர்:

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து  திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

தெலங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி,  அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய  வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →