தமிழ்நாடு

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

DIN

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவருடன் மேலும் ஐந்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயேச்சைகள் போட்டியிடுவது பரவலாக அறிந்த தகவல்தான்.

இந்த நிலையில், திராட்சை சின்னத்துடன் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் என்ற சுயேச்சை வேட்பாளர், இன்று ராமநாதபுரம் மாவட்டம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தன்னை, ஏன் ஐயா ஓபிஎஸ் என்று பேனர் அடித்து தேர்தல் பிரசாரம் செய்கிறாய் என்று கூறி 50 பேர் கொண்ட கும்பல் அடித்து மிரட்டியதாகவும், தான் வந்த வாகனத்தில் இருந்த பேனர்களை கிழத்தெறிந்ததாகவும், இனி ஓபிஎஸ் என சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில், பலாப்பழ சின்னத்துக்காரர்கள் மீதுதான் எனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுவது மட்டுமே பெரிய பிரச்னையாக பேசப்பட்ட நிலையில், அவரது சின்னமுமே பிரச்னையாக இருப்பது அண்மையில்தான் தெரிய வந்தது.

ஏற்கனவே போட்டியிடும் 5 பன்னீர்செல்வமும், ஓபிஎஸ் என்று தங்களை அடையாளப்படுத்தி பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள். அதில் அவர்களது சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

அதாவது, ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, ஒரு சுயேச்சை பன்னீர்செல்வத்துக்கு திராட்சையும், மற்றொரு பன்னீர்செல்வத்துக்கு பக்கெட் சின்னமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால், வயதான முதியவர்களுக்கு கிட்டத்தட்ட மூன்றுமே ஒன்றுபோலத்தான் தெரியலாம் என்பதே.

இதில் அனைவருமே ஓபிஎஸ் என்று போஸ்டர் அடித்தால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சின்னம் எது என்று கூட சில வாக்காளர்களுக்குத் தெரியாமல் போய்விடும் நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT