தமிழ்நாடு

திருவள்ளூரில் டிட்டோ ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோ- ஜாக்) ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் உயர்மட்ட குழுவினர் ராஜாஜி, பாலுமகேந்திரன், முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

டிட்டோ- ஜாக் பொதுக்குழு உறுப்பினர் சேகர், லோகைய்யா, கோகுலன், பாலசுபந்தரம், ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிட்டோ- ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பங்கேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் அரசாணை எண் 247-ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட தேர்தல்: மே.வங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

SCROLL FOR NEXT