நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் உரை 2.07 மணி நேரம்!

தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசாா் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிா் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழா் பண்பாடும் ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் கொண்ட பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்டவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ விரிவாக்கத்துக்கு நிதி, பேரிடர் இழப்பீட்டு தொகை உள்ளிட்டவை கிடைக்காததால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தங்கம் தென்னரசு தனது உரையில் குற்றம்சாட்டினார்.

காலை 10.02 மணியளவில் உரையை தொடங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு பகல் 12.09 வரை 2 மணிநேரம் 7 நிமிடங்கள் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

பொது நிதிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் பிப். 21-இல் காலை, மாலை இருவேளையும் நடைபெறும். பிப். 22-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் விவாதத்துக்குப் பதில் அளித்து பேசுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT