பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு X / EV Velu
தமிழ்நாடு

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

நாளை(பிப். 17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் நாளை(பிப். 17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

2026-27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஏற்கெனவே அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதன்படி 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாளை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்வார். தொடர்ந்து எத்தனை நாள்கள் அவை செயல்படும் என்பது இன்று நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இந்நிலையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நாளை வரவுள்ளதால் சட்டப்பேரவை மேசை, மைக், இருக்கைகள் என செய்யப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனும் உடனிருந்தார்.

TN Interim budget: Minister E.V. Velu review in Assembly preparations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் வசூல் இவ்வளவா..?

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், பார்மா பங்குகள் உயர்வு!!

மேற்கு வங்கம்: தனியார் மருத்துவக் கல்லூரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலம் மீட்பு

பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆவார்! காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!

தகுதியற்றவர்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

SCROLL FOR NEXT