உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின்!

47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிற்பகல் 3 மணிக்கு புத்தகக் காட்சியை திறந்து வைக்கவுள்ளதாக பபாசி தற்போது அறிவித்துள்ளது.

தொடர்ந்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி தொடக்க விழாவில் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT