தமிழ்நாடு

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 123-ஆம் ஆண்டு திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 123-ஆம் ஆண்டு திருவிழாவில் வியாழக்கிழமை 7-ஆம் நாள் வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

DIN


மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 123-ஆம் ஆண்டு திருவிழாவில் வியாழக்கிழமை 7-ஆம் நாள் வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் நடத்தப்படும் 123-ஆம் ஆண்டு திருவிழா டிச.28 -ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு வளையல்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அலங்கார தீபாரதனை மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. 

இந்த திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரியில் முறைகேடாக மணல், கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

நெல்லை கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

நெல்லையில் கல்குவாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

கணவரை கொன்றவா்களால் மகனுக்கும் ஆபத்து: ஓய்வுபெற்ற எஸ்.ஐ மனைவி முதல்வருக்கு வேண்டுகோள்

SCROLL FOR NEXT