தமிழ்நாடு

நடராஜர் கோயில் கோபுரத்தில் கொடியேற்றம்

DIN

நாடு முழுவதும் 75-வது குடியரசு நாள் விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் ஆன்மிக தலங்களிலும் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

முன்னதாக  பொதுதீட்சிதர்களின் கோயில் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் மூவர்ண கொடிவைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.  

பின்னர் பொதுதீட்சிதர்களால் கொடி, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றுமொரு பாலியல் புகார்!

SCROLL FOR NEXT