சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்!
தாம்பரத்தில் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்..
சென்னை: ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், முதல்முறையாக நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தபோது, சென்னை தாம்பரத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி வந்த நெல்லை விரைவு ரயிலில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியா்களிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது.
கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று முதல்முறையாக ஆஜராகியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.