தமிழ்நாடு

கள்ளச்சாராய பலிக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம்: எ.வ. வேலு

DIN

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறையின் மெத்தனப்போக்கே காரணம் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தை அமைச்சர்கள் எ.வ. வேலு, மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்து மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள்

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ. வேலு, கள்ளச்சாராய விவகாரத்தில் காவல் துறை மெத்தமாக இருந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் தவறு நடந்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை.

கள்ளச்சாராயம் விற்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இறந்தோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளோம்.

கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவத்தை அறிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்களை அனுப்பி வைத்தார். கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநிலங்களவை தோ்தல்: சுயேச்சை மனு தாக்கல்

இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் : இந்தியா-இஸ்ரேல் உறுதி

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

SCROLL FOR NEXT